Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை அம்மா உணவகங்களில் இந்த வாரம் முதல் சப்பாத்தி

Print PDF

தினபூமி          18.11.2013

சென்னை அம்மா உணவகங்களில் இந்த வாரம் முதல் சப்பாத்தி

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Amma-Mess(C).jpg 

சென்னை, நவ.18 - சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களில் இரவில் சப்பாத்திகள் வழங்கும் திட்டம் இந்த வாரத்துக்குள் தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் குறைந்த விலையில் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகிய வழங்கப்படுகின்றன.

மேலும் இந்த உணவகங்களில் ரூ. 3_க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனையடுத்து சப்பாத்தி வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அனைத்து மண்டலங்களிலும் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளன.

சப்பாத்தி தயாரிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ள நிலையில், இந்த வாரம் புதன் அல்லது வியாழக்கிழமையன்று சப்பாத்திகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.