தினகரன் 22.11.2013
மக்களை தேடி சிறப்பு முகாம்
கோவை, : கோவை மாவட்டத்தில் மக்களை தேடி சிறப்பு முகாம் இன்று (22ம் தேதி) நடக்கவுள்ளது.
கோவை வடக்கு தாலுகாவில் பிளிச்சி கிராமத்தில் முகாம் நடத்தப்படும். தெற்கு தாலூகாவில் ஒட்டர்பாளையம், மேட்டுப்பாளையம் தாலூகாவில் மருதூர் கிராமம், அன்னூர் தாலூகாவில் அல்லப்பாளையம், சூலூர் தாலூகாவில் கலங்கல் கிராமம், கிணத்துக்கடவு தாலுகாவில் குருநல்லிபாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி தாலூகாவில் ஜமீன் ஊத்துக்குளியில் முகாம் நடத்தப்படும். உதவி தொகை, பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர் பதிவு, பிறப்பு, இறப்பு சான்று, வருமானம், இருப்பிடம், சாதி சான்று, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் செய்தல் போன்றவை தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.