Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கருமத்தம்பட்டி பேரூராட்சியில் கோமாரி நோய் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோம்

Print PDF

தினகரன்              25.11.2013

கருமத்தம்பட்டி பேரூராட்சியில் கோமாரி நோய் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோம்

சோமனூர்,:கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோமாரி நோய் தடுக்க பேரூராட்சி நிர்வ £கம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிவருகிறது.

கோமாரி நோய் தாக்கத்தின் அறிகுறிகள் பற்றியும், அவற்றை பராமரித்து தடுக்கும் முறைகள் பற்றியும் செயல் விளக்கத்துடன் கூடிய இந்த நோட்டீசை விநியோகித்தனர்.

பேரூராட்சி தலைவர் மகாலிங்கம் தலைமையில் செயல்அலுவலர் ஜெகதீசன் முன்னிலையில் பணியாளர்கள், கால்நடைகள் உள்ள ஒவ்வொ ரு வீட்டுக்கும் சென்று மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

இதுகுறித்து துண்டு பிரசுரம் மூலமாகவும், ஆட்டோ விளம்பரம் மூலமாகவும், மற்றும் ஊழியர்கள் வீடு வீடாக சென்று கால்நடைவளர்க்கும் மக்களுக்கு கோமாரிநோய்பரவுவது பற்றியும் அவற்றை தடுப்பது பற்றியும் தெரியப்படுத்திவருகின்றனர்.

இந்த நோய் வேகமாகப்பரவிவருவதால், கால்நடைகளையே நம்பிவாழும் விவசாயிகள் கவனம் எடுத்து கால்நடைகளுக்கு நோய்தாக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டுமென்றும், மாடுகளின் வயிற்றிலும், வாயிலும் புண் ஏற்படாமல் பார்த்துக்கொல்லும் படியும், கால்நடை மருத்துவரிடம் கால்நடைகளை காண்பித்து ஆலோசனை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.