Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி குறைதீர் கூட்டம் அடிப்படை வசதிகள் கேட்டு 15 மனுக்கள்

Print PDF

தினகரன்         26.11.2013

மாநகராட்சி குறைதீர் கூட்டம் அடிப்படை வசதிகள் கேட்டு 15 மனுக்கள்

திருச்சி, : திருச்சி மாநகராட்சியில் நடந்த குறைதீர் கூட்டத்தில் அடிப் படை வசதி கேட்டு 15 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

திருச்சி மாநகராட்சி யில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ஜெயா தலைமை வகித்தார். இதில் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலை மேம் பாடு, பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்கவும், கழிவறைகள் மற்றும் பூங்காக்களை பராமரிப்பது உள்ளிட்ட 15 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட மேயர் ஜெயா, உரிய அதிகாரிகள் தள ஆய்வு செய்து மனுதாரர்களுக்கு பதில் அளிக்கும்படி தெரிவித்தார்.

இதில் 49வது வார்டு மீனாட்சி தோப்பு பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: எங்கள் பகுதியில் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி க்கு மட்டும் வடிகால் வாய்க் கால், குடிநீர் வசதி, சாலை வசதி இல்லாமல் தவித்து வருகிறோம். இது பற்றி மாநகராட்சியில் முறையிட்டால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர். முகாமில் ஆணையர் தண்டபாணி, நகர பொறி யாளர் சந்திரன், நகர் நல அலுவலர் மாரியப்பன், செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவி ஆணை யர் ரங்கராஜன், தனபால், உதவி செயற்பொறியாளர் பாலகுருநாதன், கண்ணன், ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.