Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா

Print PDF

தினகரன்          02.12.2013

செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா

திருச்சி, : திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் குழந்தைராஜன் தலைமையில் நடந்தது.

மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் நீலமேகம், மாவட்ட செயலாளர் இளங்கோவன், அதிமுக வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியை மார்கெரட் விக்டோரியா வரவேற்றார். அன்னபூரணி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகராட்சி துணை மேயர் மரியம் ஆசிக் மீரா பங்கேற்று மாவட்ட அளவில் நடந்த போட்டிக ளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மேலும் அடுத்த ஆண்டு அதிக மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகரும், சர போஜி கல்லூரி ஆங்கில பேராசிரியரான பாஸ்கர் சிறப்புரையாற்றினார். மக்கள் சக்தி இயக்க மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகர், மாந கர பொருளாளர் வாசுதேவன், துணை மேயர் மரியம் ஆசிக் மீரா ஆகியோர் சென்ற ஆண்டு 9 மற்றும் 10ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற  மாணவர்களுக்கு பரிசு, புத்தக்கங்களை வழங்கி னர். விழாவில் மக்கள் சக்தி இயக்க மாநகர நிர்வாகிகள் செல்லக்குட்டி, சூரியமூர்த்தி, ஆசிரியைகள் சந்திராதேவி, அருணா, மரினா, ரீனா, ராணி, கார்த்திகா, ஜோதி, ஜெயா, ஆசிரியர்கள் இளங்கோவன், கவிபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.