தினகரன் 02.12.2013
மேச்சேரி பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகளிலும் தவாக கொடியேற்றுவிழா
மேட்டூர், : மேச்சேரி பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகளிலும் கொடியேற்றுவிழா நடத்துவது என தவாக ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மேச்சேரி நகர ஆலோசனை கூட்டம் நகர தலைவர் கோவிந்தன் தலைமையில் நடந்தது. செயலாளர் பழனிசாமி வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் காமராஜ் சிறப்புரையாற்றினார். சேலம் மாவட்ட செயலாளர் வீராசாமி, மேச்சேரி ஒன்றிய அமைப்பாளர் ஜெகநாதன், நங்கவள்ளி அமைப்பாளர் குமார், மேட்டூர் நகர தலைவர் மணி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், மேச்சேரி பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் கொடியேற்றுவிழா நடத்துவது, சேலத்தில் பிப். 2ம் தேதி நடைபெறும் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பது, மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததை கண்டித்து போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேச்சேரி நகர துணைத்தலைவர்கள் துரைப்பாண்டி, பச்சியப்பன், பொருளாளர் கோவிந்தன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாயாண்டி உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.