Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி           04.12.2013

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணி

மதுராந்தகம் அடுத்த  அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி சார்பாக அரசு  மகளிர்  மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்கிழமை   நடைபெற்றது.

÷இப்பேரணியை  பேரூராட்சித் தலைவர் தாவூத்பீ உசேன் தொடங்கி வைத்தார். 

 பேரூராட்சி துணைத் தலைவர்  ஆ.சீனுவாசன், செயல் அலுவலர்  மா.கேசவன், ஆரம்ப சுகாதார அலுவலர் பிரபு, பேரூராட்சி மன்ற  உறுப்பினர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். பேரணயில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டுச் சென்றனர்.

முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணி பேரூராட்டசி அலுவலகத்தில் முடிந்தது.