தினத்தந்தி 06.12.2013
திமிரி பேரூராட்சியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
திமிரியில் வேலூர் மாவட்ட கலெக்டர், மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோர் உத்தரவின் பேரில், டெங்கு காய்ச்சல், திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு ஆகியவவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருமலை நாடக குழுவினரால் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி தலைமை தாங்கி, கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பேசினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் உள்பட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.