தினமணி 07.12.2013
அம்பத்தூர் மண்டலத்தில் மருத்துவக் கண்காட்சி
சென்னை மாநராட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அம்பத்தூர் மண்டலத்தில் மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் கண், பல், தோல், மார்பகப் புற்றுநோய், டெங்கு உள்ளிட்ட நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் இது தொடர்பாக மருத்துவக் கண்காட்சியும் நடைபெற்றது. இதில், நோய்கள் வராமல் தடுக்கும் முறைகள், நோய் பாதித்தால் மேற்கொள்ள வேண்டிய சிகிக்சை முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இம்முகாமை சென்னை மாநகர சுகாதார அதிகாரி டாக்டர் குகானந்தம் தொடங்கி வைத்து பேசியது:
சென்னை முழுவதும் 200 இடங்களில் மருத்துவ முகாம் நடைப்பெறுகிறது. இந்த முகாம் 5-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறும். நாளொன்றுக்கு 200 இடங்கள் என 5 நாட்களில் 1000 மருத்துவ முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மண்டல அதிகாரி ராஜேந்திரன், மண்டல சுகாதார அதிகாரி டாக்டர் லட்சுமிதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.