தினமணி 07.12.2013
நகராட்சி பள்ளியில் 15-ம் ஆண்டு தொடக்க விழா
ஆம்பூர் அழகாபுரி நகராட்சி தொடக்கப் பள்ளியின் 15-ம் ஆண்டு தொடக்க விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகர்மன்ற உறுப்பினர் கே.மணி தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.எம்.தட்சிணாமூர்த்தி, முக்கிய பிரமுகர்கள் சீனிவாசன், பாலாஜி, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.