தினமணி 07.12.2013
இலவச கண் சிகிச்சை முகாம்
கோவில்பட்டி நகராட்சி, திருநெல்வேலி வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம், நகர்நல மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்காக நடத்தப்பட்ட இம்முகாமை நகராட்சி ஆணையர் சுல்தானா தொடங்கி வைத்தார். கண் மருத்துவ நிபுணர் உஷா தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுமார் 200 பேருக்கு பரிசோதனை செய்தனர். ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.