Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கீழப்பாவூர் பகுதியில் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுப்பு

Print PDF

தினகரன்                09.12.2013

கீழப்பாவூர் பகுதியில் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுப்பு

பாவூர்சத்திரம், : கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்ட பகுதிகளில் ஆதார் அட்டை போட்டோ எடுக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நலத்திட்டங்கள் மக்களை நேரிடையாக சென்று அடையும் வகையில் இனிவரும் காலத்தில் ஆதார் அட்டை பயன்படும் முக்கியத்துவம் பெறுவதாக அமையும் என்பதால் பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை பெற  ஆவலாக   உள்ள னர்.

இந்த ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது. பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 27ம் தேதி முதல் போட்டோ எடுத்து வருகின்றனர்.

நேற்று 12வது வார்டுக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்தது. மற்ற வார்டுகளுக்கும் புகைப்படம் எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.