Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவு பணியாளர்களுக்கு சலவைப்படி வழங்க வலியுறுத்தல்

Print PDF

தினகரன்                09.12.2013

துப்புரவு பணியாளர்களுக்கு சலவைப்படி வழங்க வலியுறுத்தல்

கரூர், : பள்ளப்பட்டி பேரூராட்சி ஊழியர்கள் சங்க கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தங்கராஜ் தலைமை வகித்தார். சங்க பொருளாளர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் தலைவராக தங்கராஜ், செயலாளராக பழனிசாமி, பொருளாளராக காளியம்மாள் உட்பட பல்வேறு நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.

பள்ளப்பட்டி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு குடியிருக்க வீடுகள் கட்டித்தர வேண்டும். பள்ளப்பட்டி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும். அரசாணையின்படி பேரூராட்சி பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சலவைப்படி வழங்க வேண்டும். பெண்களுக்கு சீருடை தையற்கூலி ரூ.200 உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.