Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம்

Print PDF

தினமணி              10.12.2013

மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை மாநகராட்சி நடத்திய சிறப்பு மருத்துவ முகாம்களில் 3.89 லட்சம் பேர் கலந்து கொண்டு பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் மொத்தம் 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை 5 நாள்களாக நடைபெற்றன. இந்த முகாம்கள் பெரும்பாலும், ஏழை மக்கள் அதிகம் உள்ள குடிசைப் பகுதிகளில் நடத்தப்பட்டதால், அதிகளவில் மக்கள் ஆர்வமுடன் முகாமில் பங்கேற்றனர். வார்டுக்கு ஒரு இடம் என தினமும் 200 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றன. ஒவ்வொரு வார்டிலும் வெவ்வேறு 5 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு இடத்தில் முதன்மை முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் மொத்தம் 3,89,228 பேர் பங்கேற்று பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பெற்றனர். இதில் அதிகபட்சமாக முதல் நாளில் 86,240 பேர் கலந்துகொண்டனர். முகாம்களுக்கு ஆண்களை விட பெண்களே அதிகம் வந்தனர். 5 நாள்களிலும் சேர்த்து மொத்தம் 1,22,005 ஆண்களே முகாம்களுக்கு வந்தனர். ஆனால், 1,73,332 பெண்கள் வந்துள்ளனர். 48,430 சிறுவர்களும், 45,461 சிறுமிகளும் மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.