தினகரன் 18.12.2013
டெங்கு விழிப்புணர்வு பேரணி
மண்ணச்சநல்லூர், : மண்ணச்சநல்லூர் பேரூ ராட்சி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார் பில் நேற்று டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியை பேரூராட்சி துணை தலைவர் பொன்னம்பலம் தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரி முன்னிலை வகித் தார். பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.
பேரணியில் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு அட்டைகளை ஏந்திச் சென்றனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைராஜ், நாகமணி, மோகன்ராஜ், தேவி, அப்துல்மாலிக், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.