தினமலர் 27.12.2013
டிச., 31ல் மாநகராட்சி கூட்டம்
சேலம்: சேலம் மாநகராட்சியின் மன்றக்கூட்டம் டிசம்பர், 31ம் தேதி நடக்கிறது. ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காரணமாக, கடந்த இரு மாதங்களாக, மாநகராட்சி இயல்புக்கூட்டம் நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து, நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்ட பின், இம்மாத இயல்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அசோகன் கூறியிருப்பதாவது: சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் தலைமையில், டிசம்பர், 31ம் தேதி செவ்வாய்கிழமை காலை, 11 மணிக்கு, சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், இயல்புக்கூட்டம் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.