Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினமணி              31.12.2013

ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி கூட்டம்

திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. தலைவர் சிராஜ்நிஷா தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசிக்குமார், செயல் அலுவலர் வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர் கோகிலா: எனது வார்டில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. ஆனால் எனக்கு எதுவும் தெரிவிக்காமல் நடைபெறுகிறது. அவசர அவசரமாக பணிகள் நடந்துள்ளது. முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. 

செயல் அலுவலர் வீரன்: இனி தகவல் தெரிவிக்கப்படும்.  

கவுன்சிலர் கந்தசாமி: பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்காமல் இன்னும் அனுமதி வழங்குவது ஏன்?

கவுன்சிலர்களிடம் திட்ட அனுமதி வாங்க கொடுக்கப்படும் அஜென்டாவில் செலவின தொகை, திட்ட எண்ணிக்கை ஆகியவை மறைக்கப்பட்டுள்ளன.

முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு விவாதங்கள் நடந்தன.