தினமணி 30.12.2013
திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
களம்பூர் பேரூராட்சி சார்பில் பஜார் வீதியில் திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு குறித்த விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
களம்பூர் பேரூராட்சி சார்பில் பஜார் வீதியில் திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு குறித்த விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்றத் தலைவர் ராஜராணி முன்னிலை வகித்தார்.
இதில் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, ஏடிஸ் கொசு பற்றியும், இதனால் ஏற்படும் நோய் குறித்தும் திருச்சி கலைக் குழுவினரின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.