தினமணி 31.12.2013
செந்தாரப்பட்டி பேரூராட்சி கூட்டம்
செந்தாரப்பட்டி பேரூராட்சிப் பகுதியில் புதிதாக 100 மின் கம்பங்கள் அமைப்பதென்று பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செந்தாரப்பட்டி பேரூராட்சிக் கூட்டம் திங்கள்கிழமை அதன் தலைவர் ஆர்.மாலினிரமேஷ் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் (பொ) இளவரசன் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் சலவைத் தொழில் செய்யும் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், செந்தாரப்பட்டி ஏரிக்கரை அருகில் தண்ணீர்த் தொட்டி அமைப்பது, பேரூராட்சிக்குள்பட்ட 15 வார்டுகளிலும் 100 புதிய மின் கம்பங்கள் அமைப்பது, 1-ஆவது வார்டு மாரியம்மன் கோயில் முன்புள்ள ஆழ்துளைக் கிணற்றை ஆழப்படுத்தி அதிலிருந்து வரும் குடிநீரைப்பயன்படுத்தி இருவேறு இடங்களில் புதிதாக குடிநீர்த் தொட்டிகள் அமைப்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.