தினகரன் 02.01.2014
திருநீர்மலையில் பேரூராட்சி கூட்டம்
திருநீர்மலை, : திருநீர்மலை பேரூராட்சி கூட்டம் தலைவர் கலைவாணி தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் பிரேமா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சுப்புராயன் நகரில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான 27 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுப்பது, லட்சுமிபுரத்தில் கிராம நத்தம் இடத்தில் தனியார் சிலர் வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றி பணம் வசூலிப்பதை தடுத்து, அங்கு விளையாட்டு திடல் அமைப்பது, லட்சுமிபுரம் புது தெருவில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சமுதாய கூடம் கட்டுதல், லட்சுமிபுரம் மயானத்தில் எரிமேடை அமைப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.