Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பல்லடம் நகராட்சி கூட்டம்

Print PDF

தினகரன்             02.01.2014

பல்லடம் நகராட்சி கூட்டம்

பல்லடம், : பல்லடம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் வைஸ்.பி.கே.பழனிச்சாமி, ஆணையாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: சித்திக்(திமுக): எனது வார்டில் பட்டேல் வீதிக்கு பச்சாபாளையம் பகுதியில் இருந்து தண்ணீர் தர மறுக்கின்றனர். வார்டுக்கு தலா 5 தெருவிளக்கு அமைத்து தருவதாக கூறி ஒரு ஆண்டு ஆகிறது. இன்னும் தெருவிளக்கு அமைத்து தரவில்லை.

சண்முகம்: எனது வார்டில் சுகாதார பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் மேற்கு பல்லடத்தில் உள்ள மேல்நிலைத்தொட்டியில் இருந்து 12வது வார்டு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

கிருஷ்ணக்குமார்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலையை நகராட்சி முன்புறம் அமைக்க வேண்டும் எனக் கூறி ஆணையாளர் நாராயணனிடம் கடிதம் கொடுத்தார். பின்னர் அது, அனைவரின் ஒப்புதலுடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

தலைவர் சேகர்: சுகாதார பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும். அத்திக்கடவு 2ம் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுகிறது. அந்த பணி முடிந்தவுடன் அனைத்து வார்டுக்கும் குடிநீர் விநியோகம் சீரான முறையில் வழங்கப்படும். மேலும் அண்ணா வணிக வளாகத்தின் மேல் தளத்தில் 40 கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கடைசி கூட்டத்தில் பல்லடம் முதல் நிலை நகராட்சி சராசரி வருமானம் ரூ.7கோடியாக உள்ளதால் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அரசுக்கு கருத்துரு அனுப்புவது உள்ளிட்ட 59 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.