Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவுப் பணியாளர்களுக்கு புத்தாடை

Print PDF

தினமணி             04.01.2014 

துப்புரவுப் பணியாளர்களுக்கு புத்தாடை

உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரம சேவை பிரிவான விவேகானந்த சேவா பிரதிஷ்டான் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி விழாவை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை பேரூராட்சியின் துப்புரவுப் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவர் க.ஜெயசங்கர் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் மா.தமிழ்செல்வன் வரவேற்றார். பேரூராட்சி கவுன்சிலர் மாலதி இராமலிங்கம் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற நல்லாசிரியர்கள் முத்து. அண்ணாமலை, சீராள.சிவப்பிரகாசம், பாவாணன், உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் (ஒய்வு) கி.தங்கவேலு, பேரூராட்சியின் இளநிலை உதவியாளர் தங்கவேல், வழக்குரைஞர் காமராஜ் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

விவேகானந்த சேவா பிரதிஷ்டானின் இயக்குநரும், ஸ்ரீசாரதா வித்யாலயா பள்ளி முதல்வருமான யதீஸ்வரி ஆத்ம விகாஸப்ரியா அம்பா பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினார். பேரூராட்சி ஊழியர்கள், சந்நியாச சகோதரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.