தினமணி 04.01.2014
தெற்கு தில்லி மாநகராட்சியில் ஆப்கன் மேயர்கள்
தெற்கு தில்லி மாநகராட்சி தலைமை அலுவலகத்தை ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 19 மேயர்கள் வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர். அவர்கள் தெற்கு தில்லி மாநகாரட்சி மேயர் சரிதா செüத்ரி, ஆணையர் மணீஷ் குப்தா ஆகியோர் வரவேற்றனர்.
அப்போது மாநகராட்சியின் செயல்பாடுகள், திட்டங்கள், நிர்வாக முறைகள் ஆகிவயற்றை அவர்கள் கேட்டறிந்தனர். மாநகராட்சி மேற்கொண்டு வரும் சுகாதார நடவடிக்கைகள், பூங்கா பராமரிப்பு, மின் ஆளுகை திட்டங்கள் குறித்து மேயர் சரிதா செüத்ரி அவர்களுக்கு விளக்கிக் கூறினார்.