Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காரப்பாக்கம் பகுதியில் ஆதார் அடையாள அட்டை பணிக்காக சிறப்பு முகாம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி            04.01.2014  

காரப்பாக்கம் பகுதியில் ஆதார் அடையாள அட்டை பணிக்காக சிறப்பு முகாம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை மாநகராட்சி மண்டலம்-11, வார்டு எண் 150-க்கு உட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் மக்கள் தொகை பதிவேட்டின் அடிப்படையில் ஆதார் அடையாள அட்டை பணி தொடர்பாக புகைப்படம், கைரேகை மற்றும் விழித்திரை விவரங்கள் பதிவு செய்வதற்காக கீழ்கண்ட இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

சிவபூதம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள மகளிர் குழு கட்டிடம், சிவபூதமேடு பகுதியில் உள்ள மகளிர் குழு கட்டிடம், செட்டியார் அகரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அப்பாதுரை பிள்ளை தெருவில் உள்ள திரு.வி.க.நகர் நூலக கட்டிடம், சந்தோஷ்பாய் தெருவில் உள்ள பரசுநாத் நகர் பூங்கா நூலக கட்டிடம், ராஜேஸ்வரி நகர் 2-வது தெருவில் உள்ள விளையாட்டு திடல் கட்டிடம், ஜெயா நகர் ஜெயவிநாயகர் கோவில் தெருவில் உள்ள சரஸ்வதி கான்வென்ட், பள்ளிக்கூட தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள பொன்னியம்மன் கோவில் கட்டிடம் மற்றும் பொன்னி நகர், கம்பர் தெருவில் உள்ள கிரேஸ் பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.