Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராசிபுரத்தில் 4106 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

Print PDF

தினமணி            20.01.2014

ராசிபுரத்தில் 4106 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் 4106 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

ராசிபுரம் பாரதிதாசன் சாலை தாய் சேய் நல மையத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.

நகரில் அமைக்கப்பட்ட 21 மையங்களில் ஐந்து வயதிற்குள்பட்ட 4106 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மு.கார்த்திகேயன், நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், ரோட்டரி நிர்வாகிகள் நடராஜன், எஸ்.பாலாஜி, மெய்யப்பன், சிவக்குமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் பிரகாஷ், பாஸ்கர், லோகநாதன், அங்குராஜ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.