Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குமாரபாளையம் நகராட்சி பள்ளியில் பொங்கல் விழா

Print PDF

தினமணி            14.01.2014

குமாரபாளையம் நகராட்சி பள்ளியில் பொங்கல் விழா

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

பள்ளியில் வண்ண வண்ண கோலமிட்ட மாணவிகள், ஆசிரியைகள் மாவிலைத் தோரணம் கட்டி கதிரவனுக்கு பொங்கல் படையல் இட்டனர்.

நிகழ்ச்சியில், பொங்கல் திருநாளின் சிறப்பு, தமிழர் வரலாறு, பண்பாடுகளை தலைமையாசிரியை சி.கெüசல்யாமணி விளக்கிக் கூறினார்.

தொடர்ந்து, மாணவ, மாணவிகள் பொங்கலின் சிறப்பை விளக்கும் பாடல், பேச்சு, நடனம், கவிதைப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. கணித ஆசிரியர் வெ.வடிவேல் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.