தினமணி 17.01.2014
நீடாமங்கலத்தில் கோலப் போட்டி
நீடாமங்கலம் பேரூராட்சி 8 மற்றும் 9 -வது வார்டுகளில் பொங்கல் விழாவை முன்னிட்டு, வண்ணக் கோலப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது வீடுகளில் வண்ணக் கோலங்களை வரைந்தனர். போட்டிகளின் நடுவர்களாக கதிரவன், செல்வராஜ், சந்தானராமன் ஆகியோர் இருந்தனர்.
இப்போட்டியில் முதலிடம் வித்யாவும், 2-வது பத்ம. சித்ரா, 3-வது சுவேதா, 4-வது விஜயா முருகேசன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு முறையே ரூ. 1500, ரூ. 1000, ரூ. 500, ரூ. 300 மதிப்பிலான சேலைகள் வழங்கப்பட்டன. மேலும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி உறுப்பினர் துரை. ஆசைத்தம்பி, திமுக இளைஞரணி அப்பு, தியாகராஜன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.