தினமணி 16.01.2014
திருவிதாங்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா
திருவிதாங்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பேரூராட்சித் தலைவர் கலா கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வி.வி. வினிதா முன்னிலை வகித்தார்.
அலுவலக வளாகத்தில் பொங்கலிடப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு, இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதில், பேரூராட்சி உறுப்பினர்கள் பி.தங்கராஜ், பால்ராஜ், ஜெயா, ராதாகிருஷ்ணன், ஐயப்பன், ராஜேந்திரன், கலா, ஜெயபாரதி ஜெயலட்சுமி, தக்கலை ஒன்றிய பாஜக பொதுச் செயலர் என்.கோபாலகிருஷ்ணன், பேரூர் பாஜக தலைவர் எஸ்.பி. தேவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.