தினமணி 21.01.2014
கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்கு பூமிபூஜை
கள்ளக்குறிச்சி நகராட்சிப் பேருந்து நிலையத்தில் விரிவாக்கம் செய்தல் பணிக்காக பூமி கட்ட திங்கள்கிழமை அமைச்சர் ப. மோகன் பூமி பூஜை செய்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் போதிய இடவசதியின்மையால் பேருந்துகள் நிறுத்த மிகவும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இப்பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக தமிழக முதல்வர் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்தார். அதன் அடிப்படையில் பூமி பூஜை நடைபெறும் விழா பழைய நகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கீழ் பகுதியில் சைக்கிள் நிறுத்துமிடமும், 24 கடைகளும் கட்ட உள்ளனர்.
ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன் தலைமை வகித்து பூமி பூஜை செய்து அடிக்கல்லை நாட்டினார். எம்எல்ஏ க.அழகுவேலு பாபு, நகர்மன்றத் தலைவர் கோ.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் க.வாசுகி, ஒன்றிய குழுத் தலைவர் அ.ராஜசேகர், நகராட்சி ஆணையர் சு.அருணாச்சலம், நகரச் செயலாளர் எம்.பாபு, நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.