Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டி

Print PDF

தினகரன்            24.01.2014

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டி

துவரங்குறிச்சி, : பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

துவரங்குறிச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், பொன்னம்பட்டி பேரூ. தலைவர் அப்துல்மாலிக் தலைமையில், துணைத் தலைவர் மதியழகன் முன்னிலையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறுவர் மற்றும் சிறுமியர்கள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், செஸ் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டு பொருட்கள், திருக்குறள் புத்தகம் மற்றும் பாடப் புத்தகங்கள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பொன்னம்பட்டி பேரூ. செயல் அலுவலர் சோமசுந்தரம், பேரூ. வார்டு உறுப்பினர்கள் பிச்சையம்மாள், பாலகிருஷ்ணன், வீரைய்யா, சர்புனிசாபீவி, ராமசாமி, பீர்சுல்தான், அப்துல்காலிக், அப்துல்மாலிக், ஜரினாபேகம், பூங்கோதை, பழனியம்மாள், பாலு, வல்லான், ரேவதி மற்றும் பேரூ. பணியாளர் அழகேந்திரன், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொட்டியம்: தொட்டியம் பேரூராட்சி சார்பில் வாக்காளர் தினவிழாவை விழிப்புணர்வு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

தொட்டியம் பேரூராட்சியில் பல்வேறு இடங்களில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

தொட்டியம் பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். துணைத் தலைவர் ஐயப்பன், செயல் அலுவலர் சித்ரா, கவுன்சிலர்கள் கவியரசன், சீனிவாசன், ரமேஷ், ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி வார்டுகளில் நடந்த விளையாட்டு போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் ஐயப்பன் ஆகியோர் பரிசு வழங்கினர். அலுவலக பணியாளர் சம்பத் நன்றி கூறினார்.