Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்            24.01.2014  

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சியில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு மனிதச் சங்கிலி பேரணி நேற்று நடந்தது. பேரணியை, மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேல் தொடங்கி வைத்தார். இப்பேரணி மாநகராட்சிப் பூங்கா வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் ஆர்.டி.ஓ.பழனிக்குமார், தெற்கு தாசில்தார் பூபதி, உதவி கமிஷனர் செல்வநாயகம், தேர்தல் துணை தாசில்தார்கள் சுப்பிரமணியம், விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.