தினகரன் 24.01.2014
வாக்காளர் தின பேரணி
போடி, : போடி நகராட்சி சார்பில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் பேரணி நடைபெற்றது. இதில் நகராட்சி பள்ளியைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணியை உத்தமபாளையம் ஆர்டிஓ ஜானகி தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி நகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று புதிய பஸ்ஸ்டாண்டை அடைந்தது.
பேரணியில் தாசில்தார் பழனிகுமார், நகராட்சி ஆணையாளர் சசிகலா, பொறியாளர்கள் குணா, திருமலைவாசன், கருப்பணன் மற்றும் முத்தையா, ஆண்டவர், செந்தில், பாலமுருகன், வனராஜ், கற்பகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.