Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எளம்பிள்ளையில் திட, திரவ வள மேலாண்மைக் கருத்தரங்கம்

Print PDF

தினமணி             25.01.2014 

எளம்பிள்ளையில் திட, திரவ வள மேலாண்மைக் கருத்தரங்கம்

சேலம் மாவட்டம்,  எளம்பிள்ளை பேரூராட்சி சார்பில் திட, திரவ வள மேலாண்மைக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பழனியம்மாள் தலைமை வகித்தார். எளம்பிள்ளை பேரூராட்சித் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.

வேலூர் தொண்டு நிறுவன நிர்வாகி சீனிவாசன் பேரூராட்சிப் பகுதியில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் திட, திரவக் கழிவுகளை பொதுமக்கள் பயனடையும் வகையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் தேவையற்ற பொருள்களை பாதிப்பில்லாமல் அழிப்பது குறித்தும் இந்தக் கருத்தரங்கில் விளக்கிக் கூறினார் .

பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன், பேரூராட்சிக் கவுன்சிலர்கள் முரளி, பலராமன், சீரங்கன், மகளிர் சுய உதவிக் குழுவினர், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர்.

 பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், துப்பரவு மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.