Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது

Print PDF

தினத்தந்தி             25.01.2014

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு புகைப்படம் எடுக்கும் பணி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

புகைப்படம் எடுக்கும் பணி

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு புகைப்படம் எடுக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்தது. பின்னர் 2-வது கட்டமாக புகைப்படம் எடுக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கி ஒவ்வொரு வார்டு வாரியாக நடந்து வருகிறது.

ஈரோடு மாநகராட்சி பழைய வார்டு எண் அடிப்படையில் 36-வது வார்டில் இருந்து 45-வது வார்டு வரை உள்ள பகுதியில் பொதுமக்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது.

பழைய வார்டு எண் அடிப்படையில் புகைப்படம் எடுக்கும் பணி விவரம் வருமாறு:-

36-வது வார்டு

36-வது வார்டுக்கு உள்பட்ட ஜீவானந்தம் ரோடு, பெரும்பள்ளம் ஓடை குடிசைகள், ஜீவானந்தம் ரோடு குடிசை மாற்று வாரியம் ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

37-வது வார்டுக்கு உள்பட்ட ஈ.வி.என்.ரோடு, கருப்பண்ணன் வீதி, பெரியார் நகர் வீதி 1, 2, 3, 4, 5, 6, 7, 15, பெரியார் நகர் குடிசை மாற்று வாரியம், ராஜாக்காடு சந்து, ராஜாக்காடு வீதி 1, 2, 3 ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. பிரப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

38-வது வார்டுக்கு உள்பட்ட அண்ணா நகர் மெயின் ரோடு, அண்ணா நகர் குடிசைகள், அசோகபுரி, அசோகபுரி குடிசைகள், பெரியார் நகர், ஸ்டோனி பாலம் குடிசைகள் ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு பெரியண்ண வீதி கலைமகள் கல்வி நிலையம் தொடக்கப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

எஸ்.கே.சி. ரோடு

39-வது வார்டுக்கு உள்பட்ட தனக்கோடி லே அவுட், கருப்பண்ணசாமி கோவில் வீதி 1, 2, 3, 4, மாரப்பன் வீதி 1, 2, 3, ராஜரத்தினம் வீதி, எஸ்.கே.சி. மெயின் ரோடு, எஸ்.கே.சி. ரோடு 1, 2, 3, 4, 5, ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு சூரம்பட்டி இந்து கல்வி நிலையம் பள்ளிக்கூடத்தில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

40-வது வார்டுக்கு உள்பட்ட அவ்வையார் வீதி, தேவா வீதி, கிராமடை வீதி 1, 2, 3, 4, 5, 6, 7, லட்சுமணன் வீதி, சாந்தான் கருக்கு வீதி 1, 2, 3, 41-வது வார்டுக்கு உள்பட்ட ஈ.எம்.எம். மெயின் வீதி, ஈ.எம்.எம்.ரோடு 2, 3, பெருமாள் காடு, 42-வது வார்டுக்கு உள்பட்ட ஈஸ்வரன் வீதி, ஈ.வி.என்.ரோடு, காந்திஜி ரோடு, கள்ளியங்காடு குடிசைகள், பொய்யேரிக்கரை, பொய்யேரிக்கரை குடிசைகள் ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு ஸ்டோனி பாலம் ஆதிதிராவிடர் ஆண்கள் விடுதியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

ஜீவானந்தம் ரோடு

43-வது வார்டுக்கு உள்பட்ட பாலசுப்பராயலு வீதி, கிழக்கு பட்டக்காரர் வீதி, ஜீவானந்தம் ரோடு, காதர்மொய்தீன் சந்து, காதர்மொய்தீன் வீதி, பழைய ரெயில் நிலையம் ரோடு, பட்டக்காரர் வீதி, ஷேக் தாவூத் வீதி, தங்க பெருமாள் வீதி ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு ரெயில்வே காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது. 44-வது வார்டுக்கு உள்பட்ட எல்.ஐ.ஜி.எஸ். காலனி வீதி 1, 2, 3, ரெயில் காலனி ரோடு, 45-வது வார்டுக்கு உள்பட்ட ஈ.எம்.எம். மெயின் வீதி, ஈ.எம்.எம்.வீதி 1, 4, ரெயில்வே கூட்ஸ் செட் எதிர்புறம் உள்ள குடிசைகள், மணல்மேடு வீதி ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு கொல்லம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது. இந்தப்பகுதிகளில் வருகிற 30-ந் தேதி வரை புகைப்படம் எடுக்கப்படுகிறது.

இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் மு.விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார்.