தினகரன் 25.01.2014
பழைய 36 முதல் 45வது வார்டு வரை ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க அழைப்பு
ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பழைய வார்டு 36 முதல் 45 வரை உள்ள பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் 25ம்தேதி (இன்று) முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. புகைப்படம் எடுக்காமல் விடுபட்டவர்கள் மற்றும் கடந்த முகாமில் புதியதாக பெயர் சேர்க்கப்பட்டவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
36வது வார்டு ஜீவானந்தம் ரோடு, பெரும்பள்ளம் ஓடை குடிசைகள், ஜீவானந்தம் குடிசைமாற்று வாரிய பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈரோடு காந்திஜிரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 37வது வார்டுக்குட்பட்ட ஈவிஎன் ரோடு, கருப்பண்ணன் வீதி, பெரியார் நகர் பகுதிகள், பெரியார் நகர் குடிசை மாற்றுவாரியம், ராஜாக்காடு மற்றும் ராஜாக்காடு சந்து ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் சி.எஸ்.ஐ.பள்ளியிலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். 38வது வார்டு அண்ணாநகர் மெயின் வீதி, அண்ணா நகர் குடிசை பகுதி, அசோகபுரி, பெரியார்நகர், ஸ்டோனிபிரிட்ஜ் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஈரோடு பெரியண்ண வீதியில் உள்ள கலைமகள் கல்வி நிலைய தொடக்கப்பள்ளியிலும், 39வது வார்டுக்குட்பட்ட தனக்கொடி லேஅவுட், கருப்பண்ணசாமி கோவில் வீதி, மாரப்பன் வீதி, ராஜரத்தினம் வீதி, எஸ்.கே.சி.ரோடு ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் சூரம்பட்டி இந்து கல்வி நிலையத்திலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
40வது வார்டு அவ்வையார் வீதி, கிராமடை, தேவா வீதி, லட்சுமணண் வீதி, சாந்தான் கருக்கு, வேலா வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும், 41வது வார்டு ஈஎம்எம் வீதி, பெருமாள்காடு ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களும், 42வது வார்டு ஈஸ்வரன் வீதி, ஈவிஎன் ரோடு, காந்திஜிரோடு, கள்ளியங்காடு குடிசை பகுதி, பொய்யேரிக்கரை, பொய்யேரிக்கரை குடிசை பகுதி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஸ்டோனி பிரிட்ஜில் உள்ள மாணவர் விடுதியில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
43வது வார்டுக்குட்பட்ட பாலசுப்பராயலு வீதி, கிழக்கு பட்டக்கார வீதி, ஜீவானந்தம் ரோடு, காதர்மொய்தீன் வீதி, பழைய ரயில்வே ஸ்டேசன் ரோடு, பட்டக்காரர் வீதி, ஷேக்தாவூத் வீதி, தங்க பெருமாள் வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ரயில்வே காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். 44வது வார்டுக்குட்பட்ட எல்.ஜி.ஜி.எஸ். காலனி ரயில்வே காலனி ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும், 45வது வார்டுக்குட்பட்ட ஈஎம்எம் மெயின் வீதி, ஈஎம்எம் வீதி, குட்ஷெட்ஸ் எதிர்புறமுள்ள குடிசை பகுதிகள், மணல்மேடு வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொல்லம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.