Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏ.பி.எஸ்.அகடமி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா கவிஞர் வைரமுத்து பங்கேற்பு

Print PDF

தினகரன்             25.01.2014

ஏ.பி.எஸ்.அகடமி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா கவிஞர் வைரமுத்து பங்கேற்பு

அனுப்பர்பாளையம்,; திருப்பூர் மாநகராட்சி பூலுவபட்டி ஏ.பி.எஸ்.அகடமி மெட்ரிக் பள்ளியின்  5-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.  விழாவுக்கு மகாத்மா காந்தியின் முதன்மை செயலாளர் (1944-1948) சுதந்திரபோராட்ட தியாகி வி.கல்யாணம் தலைமை தாங்கினார். திருப்பூர்  மாநகராட்சி கல்விக்குழுத்தலைவர் மற்றும் ஏ.பி.எஸ்.அகடமி கல்வி நிறுவனங்களின் தலைவர் பட்டுலிங்கம், ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் துரைசாமி, விகாஸ் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் சேர்மன் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கவிஞர் வைரமுத்து பரிசுகளை வழங்கி பேசினார்.

புதுச்சேரி அஸிஸ்ட் வேல்டு ரெக்கார்டு நிறுவனர் ராஜேந்திரன், க்யூ-எல்யோ-மல்டிவெர்சல் யோகா நிறுவனர் ஸ்டோயன் யங், திருப்பூர் ஜினாஸ்டிக் அசோசியேஷன் தலைவர் மற்றும் ஏபிஎஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சரவணக்குமார், ஏபிஎஸ்  கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை பொருளாளர் அம்பிகாவதி, அறக்கட்டளை உறுப்பினர் நந்தினி, யோகாசக்ரவர்த்தி ஞானாம் பாள்(93வயது), திருப்பூர் மாவட்ட யோகா அசோசியேஷன் நிர்வாகி எள்ளுசாமி, ரெக்கார்டு ரெசர்ஸ் தாளா ளர் அருண், தமிழ்நாடு யோகா விளையாட்டு மேம்பாட்டுக்கழக  செயலாளர் மாரியப்பன், இந்தியன் யோகா பெட்ரேசன்  செயலாளர் மஜும்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளிக்குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமையாசிரியை மரகதம் நன்றி கூறினார்.