Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்             25.01.2014

விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், :  தேசிய வாக்காளர் தினத்தையொட்டி திருப்பூர் அரண்மனைப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பேரணியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அழகர்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணியில், பள்ளி மாணவ, மாணவியர்கள் 250 பேர் கலந்து கொண்டனர். பேரணியின் போது மாணவர்கள், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் வாசகங்களை கைகளில் ஏந்திச் சென்றனர்.

பேரணி, அரண்மனைப்புதூரில் 4 வீதிகள் வழியாகச் சென்று நடுத்தோட்டம், பெரியகாலனி, நேத்தாஜி நகர், செரிப்காலனி வழியாக பள்ளியை வந்து  நிறைவடைந்தது. பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.