தினகரன் 25.01.2014
தேசிய பெண் குழந்தை பாதுகாப்பு தினம்
திருப்பூர், : தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் போஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் ஈசுவரன் வரவேற்று பேசினார். திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கத்தலைவர் கண்ணன், வாசவி கிளப் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பெண் குழந்தைகள் தினம் பற்றி பேசினர்.
தொடர்ந்து வடக்கு ரோட்டரி கிளப் மற்றும் வாசவி கிளப் சார்பாக நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் முதல் 15 இடங்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. இதில் முதல் பரிசை 9ம் வகுப்பு மாணவி ஜீனத் நிஷாவும், இரண்டாம் பரிசை 8ம் வகுப்பு மாணவி லாவண்யாவும், மூன்றாம் பரிசை 11ம் வகுப்பு மாணவிகள் மரிய செல்சியா, ரம்யா, சீதாலட்சுமி ஆகியோர் வென்றனர். முடிவில், பள்ளி ஓவிய ஆசிரியை வளர்மதி நன்றி கூறினார்.