Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை புறநகரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

Print PDF

தினத்தந்தி           27.01.2014 

சென்னை புறநகரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

சென்னை புறநகரில் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழா

சென்னை புறநகரில் பல்வேறு பகுதிகளில் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் எச்.எஸ்.சுரேஷ் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் மண்டலக்குழு தலைவர் வி.என்.பி.வெங்கட்ராமன் தேசிய கொடி ஏற்றினார்.

பெருங்குடி

பெருங்குடியில் கே.பி.கந்தன் எம்.எல்.ஏ.வும், நீலாங்கரையில் மாநகராட்சி கணக்கு தணிக்கை குழு தலைவர் நீலாங்கரை முனுசாமியும், துரைப்பாக்கத்தில் மாநகராட்சி கவுன்சிலர் டி.சி.கோவிந்தசாமியும், பெருங்குடி மண்டல அலுவலகத்தில் மண்டலக்குழு தலைவர் ராஜாராம் ஆகியோரும் தேசிய கொடி ஏற்றினர்.

மேடவாக்கம் ஊராட்சியில் தலைவர் ப.ரவி, பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர் சுகாசினி ரங்கராஜன், மூவரசம்பேட்டையில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பக்தவச்சலம் ஆகியோர் தேசிய கொடியேற்றி வைத்தார்.

திருவொற்றியூர்-மணலி

திருவொற்றியூர் மண்டலத்தில் உதவி ஆணையர் காங்கேயன் கென்னடி தலைமையில் மண்டலக்குழு தலைவர் தனரமேஷ் தேசியகொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.

மணலி மண்டலத்தில் உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் மண்டலக்குழு தலைவர் தங்கசிவம் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

தாம்பரம்

தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகரசபை தலைவர் கரிகாலன், பல்லாவரம் நகராட்சியில் தலைவர் நிசார்அகமது, பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் என்.டி.கிருஷ்ணன், அனகாபுத்தூர் நகராட்சியில் தலைவர் அனகை வேலாயுதம், பம்மல் நகராட்சியில தலைவர் சி.வி.இளங்கோவன் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.

செம்பாக்கம் நகராட்சியில் தலைவர் சாந்தகுமார், மாடம்பாக்கம் பேரூராட்சியில் தலைவர் விமலா, சிட்லபாக்கம் பேரூராட்சியில் தலைவர் மோகன், பெருங்களத்தூர் பேரூராட்சியில் தலைவர் சேகர், பீர்க்கன்கரணை பேரூராட்சியில் தலைவர் சம்பத்குமார் ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்தனர்.

திருவேற்காடு-ஆவடி

திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் மகேந்திரன், வானகரம் ஊராட்சியில் தலைவர் சீனிவாசன் ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்தனர்.

ஆவடி நகராட்சியில் நகர்மன்ற தலைவர் சா.மு.நாசர், திருநின்றவூர் அடுத்த பாக்கம் ஊராட்சியில் தலைவர் திருமஞ்சுஅருள்தாஸ், ஆலத்தூர் ஊராட்சியில் தலைவர் முனுசாமி, திருநின்றவூர் பேரூராட்சியில் தலைவர் தி.வை.ரவி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்தனர்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளி

சென்னை புழலில் உள்ள சென்னை வாழ் நாடார்கள் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் ஸ்ரீ நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரியின் செயலாளரும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் நிர்வாக அதிகாரியுமான எஸ்.கோவிந்தசாமி தேசிய கொடியேற்றினார்.

புழலில் உள்ள சென்னை வாழ் நாடார்கள் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் காமராஜ் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை உறுப்பினர் ஏ.என்.எஸ். நல்லழகு தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

செங்குன்றம்

செங்குன்றம் பேரூராட்சியில் குடியரசு தினத்தையொட்டி பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் குமாரி அருணாசலம் தேசிய கொடி ஏற்றினார்.