Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தஞ்சை பகுதிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

Print PDF

தினத்தந்தி           27.01.2014 

தஞ்சை பகுதிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தஞ்சை பகுதிகளில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

நகராட்சி

தஞ்சை நகராட்சியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு நகரசபை தலைவி சாவித்திரிகோபால் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து, நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்திசிலைக்கு மாலை அணிவித்தார். பின்பு நகராட்சி அதிகாரிகள், நகரசபை உறுப்பினர்கள், பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

இதில் நகராட்சி பொறியாளர் சீனிவாசன், நகர்நல அலுவலர் செந்தில்குமார், மேலாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ், முன்னாள் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்ப்பல்கலைக்கழகம்

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் துணைவேந்தர் ம.திருமலை தேசிய கொடியை ஏற்றி வைத்து, 25 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்கள் ஜெகதீசன், அரங்கசாமி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பரிசுத்தொகையை வழங்கினார். பதிவாளர் கணேஷ்ராம் வரவேற்றார். விழாவில் பல்கலைக்கழக மாணவிகள் தற்காப்பு கலையை செய்து காண்பித்தனர். இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவக்கல்லூரி

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு முதல்வர் மகாதேவன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவிற்கு துணை முதல்வர் சிவசாமி, டாக்டர்கள் சங்கரநாராயணன், நல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையிலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. முடிவில் நிலைய மருத்துவ அலுவலர்கள் மனோகரன், ஜெயச்சந்திரன் ஆகியோர் நன்றி கூறினர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்

வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு துணைவேந்தர் நல்.ராமச்சந்திரன் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் ஜெர்மனி நாட்டில் உள்ள ஆகன் பல்கலைக்கழக பேராசிரியர் சட்டர்ஜி மற்றும் அவருடைய மனைவி அனயுலோனாசாவேஸ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அரசு உயர்நிலைப்பள்ளி

குருங்குளம் கிழக்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு தலைமை ஆசிரியை ஜெயம்ஜெயசீலி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பாலச்சந்திரன் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் அனுராதாமணிகண்டன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமார் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முடிவில் ஆசிரியை மாலதி நன்றி கூறினார்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

சானூரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகி நந்தகுமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை தாங்கினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நந்தகுமார், சத்துணவு அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை அனிதா நன்றி கூறினார்.

நகராட்சி உயர்நிலைப்பள்ளி

தஞ்சை முனிசிபல்காலனி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு தலைமை ஆசிரியை மேரிவிமலா தலைமை தாங்கினார். நகரசபை உறுப்பினர் சர்மிளாதேவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கோவிந்தராசு வரவேற்றார். காந்திய மக்கள் இயக்க மாவட்ட துணைத் தலைவர் வேம்பு குடியரசு தினத்தை பற்றி பேசினார். முடிவில் ஆசிரியர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

பாரதீய ஜனதா கட்சி

தஞ்சையில் பாரதீய ஜனதா சார்பில் நடந்த குடியரசு தினவிழாவில் முன்னாள் ராணுவவீரர் பழனிகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தஞ்சை ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பாலசெல்வம், ஆனந்தன், கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைத் தலைவி தனலட்சுமி நன்றி கூறினார்.

நாஞ்சிக்கோட்டை ஊராட்சி

நாஞ்சிக்கோட்டை ஊராட்சி வெங்கடேசா நகரில் நடந்த குடியரசு தினவிழாவில் ஊராட்சி மன்ற தலைவி கீதாசேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவிற்கு பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் மற்றும் கண்ணையன், சேவியர், கருப்பையா, குணசேகரன், பரமசிவம், தரணிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதரவற்றோர் மாணவர் இல்லம்

தஞ்சையில் உள்ள ஆதரவற்றோர் மாணவர் இல்லத்தில் இந்திய குழந்தைகள் நலச்சங்கம் சார்பில் நடந்த குடியரசு தினவிழாவில் விடுதிகாப்பாளர் சுடரொளி வரவேற்றார். கவுரவ செயலாளர் ரகுநாதன் தலைமை தாங்கினார். பூண்டி புஷ்பம் கல்லூரி பேராசிரியர் சாமிநாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் செயற்குழு உறுப்பினர் ஜெயகுமார் சிலம்ப ஆசிரியர் கோவிந்தன், தற்காப்பு கலை ஆசிரியர் முபாரக், இல்ல ஊழியர்கள் ராமதாஸ், ஆயிப்பொண்ணு மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பிரசன்னா நன்றி கூறினார்.

சுவாமி விவேகானந்தர் கல்வி அறக்கட்டளை

தஞ்சை முனிசிபல் காலனியில் சுவாமி விவேகானந்தர் கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த குடியரசு தினவிழாவில் தேசிய கொடியை சின்னையன் ஏற்றி வைத்தார். ஆசிரியர் பரமானந்தம் குடியரசு தினம் பற்றி பேசினார். இதில் பாலசெல்வம், சந்திரன், சாகுல்அமீது, சத்யா, தனலட்சுமி, பத்மபிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.