Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாமக்கல், பரமத்தியில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்

Print PDF

தினத்தந்தி           27.01.2014 

நாமக்கல், பரமத்தியில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்

நாமக்கல், பரமத்தி பகுதியில் நேற்று குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குடியரசு தினவிழா

நாமக்கல்-திருச்செங்கோடு ரோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் குடியரசு தினவிழா கொண் டாடப்பட்டது. விழாவுக்கு சங்க தலைவர் தென்னரசு தலைமை தாங்கினார். இதில் நாமக்கல் சட்டமன்ற உறுப் பினர் கே.பி.பி.பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சங்க வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் காந்திமுருகேசன், நகராட்சி துணை தலைவர் சேகர், கூட்டுறவு சங்கத்தின் துணை தலைவர் நல்லதம்பி மற்றும் சங்க உறுப்பினர்கள், பணி யாளர்கள் கலந்து கொண் டனர்.

நகராட்சி பள்ளி

நாமக்கல் கோட்டை நகராட்சி தொடக்கபள்ளியில் குடியரசு தினவிழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உழவன் தங்கவேலு தலைமை யில் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் நிர்மலா வரவேற்று பேசினார். இதில் நாமக்கல் நகராட்சி தலைவர் கரிகாலன் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். இதில் நக ராட்சி கமிஷனர் (பொறுப்பு) கமலநாதன், பள்ளி கல்விக்குழு தலைவர் குப்புசாமி, மேலாண்மை குழு தலைவர் சம்பத் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண் டனர். இதையொட்டி மன வளக்கலை மன்றம் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் உதவி ஆசிரியை யோகலட்சுமி நன்றி கூறினார்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று குடியரசு தினவிழா கொண்டா டப்பட்டது. இதையொட்டி ஒன்றிய குழு தலைவர் கவிதா சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல் லப்பன், வெங்கடாசலம் மற் றும் ஒன்றியகுழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் அருகே உள்ள சின்னமுதலைப்பட்டி நடு நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட் டது. தலைமை ஆசிரியர் மோகன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். இதில் அம்மச்சி அம்மன் அறக்கட் டளை துணை செயலாளர் முத்துசாமி, நூலகர் சுப்பிர மணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எலச்சிபாளையம் அருகே உள்ள புள்ளாச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கிராம கல்விக்குழு தலைவர் ஆறுமுகம், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துசாமி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற் றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

தோ.ஜேடர்பாளையம்

நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் திப்பகாப் பட்டி காலனி நேருயுவக் மண்டல் இணைந்து குடியரசு தினத்தை முன்னிட்டு விளை யாட்டு போட்டிகளை நடத் தின. இதில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பரிசு பொருட் களும், சான்றிதழ்களும் வழங் கப்பட்டது. இதில் நேருயுவ கேந்திரா சார்பில் தவமணி, ராஜசேகர், கிருஸ்துதாஸ், முன்னாள் தலைவர் சரவ ணன், தற்போதைய தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தோ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதையொட்டி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் பள்ளி அளவில் நடை பெற்ற பேச்சுபோட்டி, கட் டுரை போட்டி, ஓவியப்போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாண விகளுக்கு பரிசுகளும், சான் றிதழ்களும் வழங்கப்பட்டது.

பொன்விழா நகர் கிளை நூலகத்தில் நடைபெற்ற குடி யரசு தினவிழாவுக்கு வாசகர் வட்ட தலைவர் மதுரம் தலைமை தாங்கினார். நாமக் கல் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கவிதா சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் நூலக புரவலர்கள், வாசகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பொத்தனூர் பேரூராட்சி

பொத்தனூர் பேரூராட்சி யில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பேரூராட்சி தலைவர் நாராயணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்பு கள் வழங்கினார். இதில் செயல்அலுவலர் வெங்கடே சன், துணைத் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.

பாண்டமங்கலம் பேரூராட் சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பானுமதிபாலகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செயல்அலுவலர் கந்தசாமி, துணைத்தலைவர் கருணாநிதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.

வெங்கரை பேரூராட்சி

வெங்கரை பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் நித்யகுமாரி விஜயகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செயல் அலுவலர் ஞானசுந்தரம், துணைத் தலைவர் சகாதேவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பரமத்தி வேலூர் பேரூராட்சி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வேலுச்சாமி தேசிய கொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்கினார். துணைத் தலைவர் பேபிலதா, செயல்அலுவலர் குருராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பரமத்தி பேரூராட்சி

பரமத்தி பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் உஷாராணி பாண்டி யன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி னார். துணைத் தலைவர் பிரபாகரன், செயல் அலுவலர் கணேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பொத்தனூர் வெங்க மேடு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி ஆகிய பள்ளி களில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சி யில் பள்ளி தலைமை ஆசிரியர் கள் மாலதி, சித்தார்த்தன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

இதேபோல் நேற்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் குடியரசு தினவிழா கோலா கலமாக கொண்டாடப் பட்டது.