Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் குடியரசு தின விழா

Print PDF

தினமணி          27.01.2014 

சென்னையில் குடியரசு தின விழா

சென்னை மாநகராட்சி மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 65-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ரிப்பன் கட்டடத்தில்...

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், மேயர் சைதை துரைசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படை மற்றும் சாரண, சாரணியரின் அணிவகுப்பு மாõயாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெüரவித்தார்.

2013-14-ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருதுபெற்றவர்களுக்கும் கேடயங்களையும் அவர் வழங்கினார். செண்பகப்பூ மற்றும் செüந்தரியம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, இந்தியன் வங்கி கிளைகளின் மூலம் வழங்கப்பட்ட தலா ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை மேயர் வழங்கினார். மேலும், 71 பயனாளிகளுக்கு தனி நபர் கடனாக ரூ.1.06 கோடிக்கான காசோலைகளையும், 21 அண்டை வீட்டுக் குழுக்களுக்கு ரூ.33 லட்சத்துக்கான காசோலைகளையும் அவர் அளித்தார்.

விழாவில் சென்னை மாநகராட்சி துணை மேயர் பெஞ்சமின், ஆணையர் விக்ரம் கபூர், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலத்தில்...

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய வளாகத்தில் நடந்த விழாவில், மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர், தேசியக் கொடியை ஏற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பா.ஜோதி நிர்மலா, அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எழிலகத்தில்...

சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள வருவாய் ஆணையர் அலுவலத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர், தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர்(பேரிடர் மேலாண்மை) ஆஷிஷ் சாட்டர்ஜி, இணை ஆணையர் ஜெயராமன், சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநர் மலர்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியன் வங்கி...

ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியின் கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் ராஜாஜி சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், வங்கியின் செயல் இயக்குநர் எம்.கே.ஜெயின், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் துணைப் பொது மேலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடியரசு தினத்தையொட்டி, மூத்த குடிமக்களுக்காக இலவச கண் சிகிச்சை முகாமுக்கு இந்தியன் வங்கி ஏற்பாடு செய்திருந்தது.

அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில்...

குடியரசு தினத்தையொட்டி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், மருத்துவமனை வளாகத்தில் ரத்ததானம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மனித உரிமைகள் ஆணையத்தில்...

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணைய வளாகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில், ஆணையத் தலைவர் ஜெயந்தி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளர், பதிவாளர் துரைசாமி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.