Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாத்தூரில் குடியரசு தினவிழா

Print PDF

தினமணி          27.01.2014 

சாத்தூரில் குடியரசு தினவிழா

சாத்தூர் பகுதியில் 65ஆவது குடியரசு தினவிழா ஞாயிற்றுக்கிழமை  அனைத்து இடங்களிலும் கொண்டாடப்பட்டது.

 நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்றத் தலைவர் டெய்சிராணி கொடியேற்றினார். நகராட்சி ஆணையாளர் மணி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், ஆய்வாளர்கள், நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் வேலாயுதம் கொடியோற்றினார். சாத்தூர் தாலூகா அலுவலகத்தில் சாத்தூர் வட்டாட்சியர் அன்னலட்சுமி கொடியேற்றினார்.

   சாத்தூர் பகுதியில் இதே போன்று ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி, ராதாகிருஷ்ணன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, படந்தால் அரசு மேல்நிலைப் பள்ளி, உப்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, என். சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி,சிப்பிப் பாறை அரசு மேல்நிலைப் பள்ளி, சா.இ.நா. எட்வர்டு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் குடியரசு தினவிழா அதன் தலைமையாசிரியர்கள் தலைமையில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரி, சாத்தூரில் உள்ள அரசு கல்லூரிகளில் அந்தந்த கல்லூரிகளின் முதல்வர்கள் கொடியேற்றி வைத்தனர். கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.