தினமணி 27.01.2014
வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
வந்தவாசி நகராட்சி சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை வட்டாட்சியர் எஸ்.ராஜலட்சுமி தொடங்கி வைத்தார். வந்தவாசி டிஎஸ்பி மகேந்திரன், நகராட்சி ஆணையர் எஸ்.லட்சுமி, நகராட்சி பொறியாளர் டி.ராஜவிஜயகாமராஜ், துணை வட்டாட்சியர்(தேர்தல்) டி.அரிதாஸ் மற்றும் வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மாணவியர், பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.
பின்னர் வந்தவாசி மேற்கு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்குரிமை, வாக்களிப்பதின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து விளக்கிக் கூறப்பட்டது.