Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈச்சம்பட்டியில் நியாயவிலை கடை கட்டிடம் திறப்பு

Print PDF

தினகரன்          27.01.2014 

ஈச்சம்பட்டியில் நியாயவிலை கடை கட்டிடம் திறப்பு

துறையூர், : உப்பிலியபுரம் பேரூராட்சியில் உள்ள ஈச்சம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.6.66 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாயவிலை கடை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் மைவிழி அன்பரசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் அழகாபுரி செல்வராஜ் வரவேற்றார். கடையை எம்எல்ஏ இந்திராகாந்தி திறந்து வைத்தார்.

உப்பிலியபுரம் ஒன்றியக்குழு தலைவர் லலிதா செல்லமுத்து, அவைத்தலைவர் வைரபெருமாள், பேரூராட்சி செயலாளர்கள் ராஜாங்கம், ராஜேந்திரன், கூட்டுறவு இயக்குனர் முத்துசாமி, தலைவர் மருதமுத்து, செயலாளர் அசோகன், துறையூர் ஒன்றியக்குழு தலைவர் பாலசுப்பிரமணியன், வட்ட கூட்டுறவு விற்பனையாளர் சங்க தலைவர் மோகன்தாஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் பாக்யலட்சுமி, கண்ணதாசன், செல்வம், கலைச்செல்வி துரைராஜ், சுந்தர்ராஜீ, அக்ரோ தலைவர் தர்மராஜ், சிக்கத்தம்பூர் கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செயல் அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.