Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி ஊழியர்களுக்கு தியான பயிற்சி வழங்கல்

Print PDF

தினமலர்           29.01.2014 

மாநகராட்சி ஊழியர்களுக்கு தியான பயிற்சி வழங்கல்

ஈரோடு: பிரம்ம குமாரிகள் சபா சார்பில், ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்களுக்கு, இயற்கை பேரிடரில் இருந்து காக்கும், தியானப்பயிற்சி வழங்கப்பட்டது.

மனிதர்களின் மனமாற்றத்தால், இயற்கை பேரிடரை தவிர்க்க முடியும் என, நாடு முழுவதும், சென்னையில் இருந்து, கன்னியாகுமரி வரை, ஒரு குழுவும், சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஒரு குழுவாகவும், அறிவியல் அறிஞர்கள் மற்றும் இன்ஜினியர்கள் அடங்கிய குழு, தியானப்பயிற்சியின் பலன்களை, பொதுமக்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று எடுத்துரைத்து வருகின்றனர்.

அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சேலத்தில் இருந்து ஈரோடு வந்த சென்னை - திருவனந்தபுரம் ஈஸ்வரன் தலைமையிலான குழு, ஈரோட்டில் கல்லூரிகள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் தீத்தடுப்பு அலுவலகங்களில் தியானப்பயிற்சி அளித்தனர். தொடர்ந்து, மாநகராட்சி கூட்ட அரங்கில், ஊழியர்கள், அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவரும் சகோதரர் என்ற எண்ணம், பிற உயிர்களிடத்தில் அன்பு ஏற்பட வேண்டும். மனிதர்களிடம் மாற்றம் ஏற்பட்டால், அது இயற்கையையும் பிரதிபலிக்கும், என விளக்கினர். தொடர்ந்து இக்குழு, திருப்பூர் சென்று, கோவை, பாலக்காடு வழியாக திருவனந்தபுரம் செல்கின்றனர்.