தினமலர் 29.01.2014
பேரூராட்சி கூட்டம்
வடமதுரை: வடமதுரை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் பாப்பாத்தி தலைமையில் நடந்தது.செயல் அலுவலர் விஜயநாத், துணைத்தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நன்னி ஆசாரியூர், ஏ.வி.பட்டி, போஜனம்பட்டி, ரெட்டியார்களம், சக்கரவர்த்தி நகர் பகுதிகளில் குடிநீர் பணிகள் செய்ய ஒப்புதல் தரப்பட்டது. வார்டு பகுதிகளில் ஆங்காங்கே புதிய ஆழ்குழாய் அமைத்து மின்மோட்டார் பொருத்த அனுமதிக்கப்பட்டது.