தினகரன் 30.01.2014
கூடுவாஞ்சேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கூடுவாஞ்சேரி, : நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி, ஹேண்ட் இன் ஹேண்ட் மற்றும் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி இணைந்து பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தியது.
பேரூராட்சி செயல் அலுவலர் குற்றாலிங்கம் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். வார்டு கவுன்சிலர் டில்லீஸ்வரி ஹரி, முன்னாள் கவுன்சிலர் பத்மநாபன், பள்ளி தலைமை ஆசிரியர் ஹெல்பெலக்ஸ் முன்னிலை வகித்தனர்.
பள்ளியில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. குப்பைகளை சாலைகளில் போடாதீர், கழிவுநீர் கால்வாய்களில் கொட்டாதீர், கடைகளில் பிளாஸ்டிக்குகளை விற்பதை தவிர்ப்பீர் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பேரணியில் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.