Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குமாரபாளையத்தில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி இன்று முதல் தொடக்கம்

Print PDF

தினமணி                30.01.2014

குமாரபாளையத்தில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி இன்று முதல் தொடக்கம்

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி வியாழக்கிழமை (ஜன. 30) தொடங்குகிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் என்.சங்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமாரபாளையம் நகரில் தேசிய அடையாள அட்டைக்கு முதல்கட்டமாக ஒன்றாவது வார்டு மக்களுக்கு சின்னப்பநாய்க்கன்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், 18-ஆவது வார்டு மக்களுக்கு ஹோலிகிராஸ் பள்ளியிலும் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் புகைப்படம் எடுக்கும் பணிக்கு 5 வயதுக்கு மேற்பட்டோர் 2010-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புகைச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் வந்து தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

விடுமுறை நாள்களிலும் இந்தப் பணி நடைபெறும். பிற வார்டுகளில் புகைப்படமெடுக்கும் நாள், விவரம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு நகராட்சி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.