தினத்தந்தி 30.01.2014
மாநகராட்சியில் 25 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய டிரைவருக்கு பரிசு
வேலூர் மாநகராட்சி சார்பில், விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய டிரைவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கமிஷனர் ஜானகி தலைமை தாங்கினார். மேயர் கார்த்தியாயினி கலந்து கொண்டு, 25 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய, மாநகராட்சி ஓட்டுனர் சங்க செயலாளர் சுரேந்திரனுக்கு தங்கப்பதக்கம், ரூ.500 மதிப்புள்ள சேமிப்பு பத்திரத்தை வழங்கினார். அத்துடன் 15 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய 14 டிரைவர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரங்களையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் தருமலிங்கம், மண்டலக்குழு தலைவர் குமார், என்ஜினீயர் பாஸ்கரன், ஓட்டுனர் சங்க தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் திருமலைவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.